வாழ்ந்து வந்த வாழ்க்கையில் அவரவர் வாழ்விடங்கள் பொறுத்து குளம், ஏரி, கண்மாய், ஆறு, கடல் என்று பார்த்து வாழ்ந்து வந்தாலும் எந்த ஜீவ நதியும் உங்களை கேட்டு ஓடவும் இல்லை. அதே போல் நிற்கவும் இல்லை. அது போலத்தான் இந்த தமிழும், தமிழன் வாழ்வும். வெளியில் இருந்து பார்த்தவர்கள், உள்ளே கால் மட்டும் நனைத்தவர்கள், முடிந்த வரை நீச்சல் அடித்தப் பார்த்தவர்கள், முடியாமல் மூழ்கியும் போனவர்கள் என்ற போதிலும் வற்றாத ஜீவநதியாக அதன் பாதையில் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது.